மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்- இபிஎஸ்

65பார்த்தது
மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்- இபிஎஸ்
மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு? உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்! மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது, மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி