புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு

69பார்த்தது
புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு
புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்தன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய கிரிமினல் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தின் கீழ் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வியாபாரம் செய்ததாக கூறி, பீகாரைச் சேர்ந்த தெருவோர வியாபாரி பங்கஜ் குமார் மீது போலீசார் இந்த வழக்குப்பதிவை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி