பதவி விலகத் தயார் - கர்நாடக முதலமைச்சர் அதிரடி

50பார்த்தது
பதவி விலகத் தயார் - கர்நாடக முதலமைச்சர் அதிரடி
பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் பதவி விலகத் தயார் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மோடி, நிர்மலா சீதாராமன், நில ஒதுக்கீடு புகாரில் குமாரசாமி ஆகியோர் முதலில் பதவி விலக வேண்டும். அவர்கள் விலகினால் நானும் பதவி விலகுவேன் என்றார். முடா ஊழலில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி