கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா பகுதியில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 93 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3.05 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. வடக்கன்பலூரைச் சேர்ந்த எஸ்.முஹம்மது ரஃபிக் (44) என்பவருக்கு அதிவிரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுராஜ் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். இரண்டு பிரிவுகளின் கீழ் 33 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1.05 லட்சம் அபராதமும், போக்சோ சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.