கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாட்டிலும் சோதனை நடைபெற்றது. இவ்வழக்கில் சிவமோகாவின் தீர்த்தஹள்ளியில் உள்ள பாஜக நிர்வாகியிடம் என்.ஐ.ஏ இன்று விசாரணை நடத்தியது. முன்பு என்.ஐ.ஏ ஆல் விசாரிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களுடன் குறித்த பாஜக நிர்வாகி தொடர்பில் இருந்ததாக நம்பப்படுகிறது.