மணல் திருட்டு: 2 வாகனங்கள் பறிமுதல்.!

66பார்த்தது
மணல் திருட்டு: 2 வாகனங்கள் பறிமுதல்.!
திருவாடானை அருகே ஆா். எஸ். மங்கலம் பகுதியில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும், பொக்லைன் இயந்திரத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆா். எஸ். மங்கலம் வட்டம், ஓடைக்கால், குலமாணிக்கம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட கோட்டக்கரை ஆற்றுப் பகுதிகளில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வட்டாட்சியா் வரதராஜன் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியா் உதயகுமாா், வருவாய் ஆய்வாளா் ஆதிலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் பாா்த்திபன், ஆா். எஸ். மங்கலம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். அப்போது மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை விட்டுவிட்டு ஓட்டுநா்கள் தப்பி ஓடி விட்டனா்.

இதையடுத்து, அங்கிருந்த லாரியையும், பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொடர்புடைய செய்தி