பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு; தள்ளிவைப்பு!

1570பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, புரோக்கர் அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் அ. தி. மு. க. நிர்வாகி சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

சிகாமணிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி சி. பி. சி. ஐ. டி. , இன்ஸ்பெக்டர் கீதா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி இளங்கோவன் சிகாமணிக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து சிகாமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட அன்னலட்சுமி உமா மற்றும் கயல்விழி ஆகியோருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜாமின் வழங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிகாமணி உள்பட 5 பேரும் ஆஜர் ஆகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத் வழக்கு விசாரணையை ஜூன் 21க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி