கமுதியில் ஜூலை 25இல் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.!

57பார்த்தது
கமுதியில் வருகிற 25 }ஆம் தேதி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றறப்பட உள்ளதாக கமுதி வட்டாட்சியர் எஸ். காதர்முகைதீன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி நகர் பகுதிகளில் குண்டாறு பாலம் முதல் வாரச்சந்தை வளாகம் வரை நெடுஞ்சாலையின் இருபுறறமும் போக்குவரத்துக்கு இடையூறறாக உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் ஜூலை 25 }ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் அகற்றற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளர்கள் புதன்கிழமைக்குள் தாங்களாக முன்வந்து ஆக்கிமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதில் தவறும்பட்சத்தில் வருவாய், நெடுஞ்சாலை, பேருராட்சித் துறைறகள் இணைந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபடும். இதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட நபர்களிடம் வசூல் செய்யப்படும். கைப்பற்றறப்பட்ட பொருள்கள் அரசுடைமையாக்கப்படும் என்றார் அவர்.

தொடர்புடைய செய்தி