பெருநாழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்.!

78பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி அருகேயுள்ள வாழவந்தாள்புரத்தில் அமைந்துள்ள வாழவந்தம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. புதன்கிழமை பொதுமக்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இந்த விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 மாட்டுவண்டிகள், பந்தய வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். பெருநாழி}வாழவந்தாள்புரம் கிராம சாலையில் 16 கி. மீ இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, போட்டி நடைபெற்றறது.

முதல் 3 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு, ரொக்க பணம், குத்து விளக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் போட்டியை பெருநாழி, மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள திரளான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை வாழவந்தாள்புரம் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்தனர்.

தொடர்புடைய செய்தி