கென்யாவில் கொட்டித் தீர்த்த மழை - 32 பேர் பலி

70பார்த்தது
கென்யாவில் கொட்டித் தீர்த்த மழை - 32 பேர் பலி
ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கென்யாவில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஊருக்குள் தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் சிக்கிய மக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இந்த நிலையில் கென்யாவில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தது. இந்த வெள்ளப்பெருக்கில் மூழ்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன பலரையும் தற்போது மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி