மக்களவை தேர்தலையொட்டி கேரளாவில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கேரளா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையமும் கட்சிகளும் செய்யும் பிரச்சார நடவடிக்கைகள் எந்தளவுக்கு பலன் தரும் என்பதும் இன்று தெரியும். இன்று காலை முதலே மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
கேரளாவில் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.