அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை தொடரும்!

1296பார்த்தது
அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை தொடரும்!
பெரம்பலூர், அரியலூர் உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், நாகைப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி