ஆற்று மணல் கடத்திய இருவர் கைது 2 டிராக்டர் பறிமுதல்!

57பார்த்தது
ஆற்று மணல் கடத்திய இருவர் கைது 2 டிராக்டர் பறிமுதல்!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடவம்பட்டி வெள்ளாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராமன் நிர்வாக அலுவலர் மோகன் ராஜா சந்தேகத்துக்கிடமான அடுத்தடுத்து வந்த இரண்டு டிராக்டர்களை நிறுத்தி சோதனை இட்டதில் அப்போது அந்த டிராக்டர்களில் தலா இரண்டு யூனிட் ஆற்று மணல் சட்ட விரோதமாக கடத்தி வந்ததை கண்டுபிடித்த கிராம நிர்வாக அலுவலர் மோகன் ராஜா சம்பந்தப்பட்ட இரண்டு டிராக்டர்களை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட இலுப்பூர் கூடலூர் பகுதியை சேர்ந்த ரகுபதி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இரு நபர்களை இலுப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இலுப்பூர் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் சம்பந்தப்பட்ட இரு நபர்களையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்தார்.

தொடர்புடைய செய்தி