புதுக்கோட்டை மாவட்டம் வயலோகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அன்னவாசல் போலீசார் வயலோகத்தில் உள்ள ஒரு மளிகைக்கடையை ஆய்வு செய்தனர் அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தது தெரிய வந்தது இதனையடுத்து போலீசார் மளிகைக்கடை உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலையை பறிமுதல் செய்தனர்