அறந்தாங்கியில் மார்க்சிஸ்ட் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

53பார்த்தது
அறந்தாங்கியில் மார்க்சிஸ்ட் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்குரைஞர்கள் பிரிவு சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி அம்மா உணவகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட வழக்குரைஞர்கள் கிளையின் செயலர் அலாவுதீன் தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலர் எஸ். கவிவர்மன், சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கருணா, விசிக தெற்கு மாவட்டச் செயலர் ராமநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் ஏ. ராஜேந்திரன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞர் பிரிவு கலை முரசு, விசிக மாநில கருத்தியல் துணைச் செயலர் மோட்ச குணவழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் அஜய்குமார்கோஷ் உள்ளிட்டோர் பேசினர்.
மத்திய அரசின் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிஎழுப்பப்பட்டன. முடிவில் வழக்குரைஞர் சுதா ராணி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி