ஆலங்குடி அருகே விவசாயி தற்கொலை

62பார்த்தது
ஆலங்குடி அருகே விவசாயி தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே செம்பட்டி விடுதியை சேர்ந்த மாணிக்கவாசகம் விவசாயி. இவர் சம்பவத்தன்று குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து அப்பகுதியில் உள்ள டீக்கடையில் அருகில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாணிக்கவாசகம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்நிலையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் செம்பட்டிவிடுதி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி