சனிபகவான் ஆலயத்தில் மாசி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை

63பார்த்தது
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் மாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மஞ்சள், பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி