காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் 8 மணி நேரத்திற்கு மேலாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகரப்பகுதி மற்றும் திருநள்ளாறு, அம்பகரத்தூர், நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.