பொங்கல் தொகுப்பு உடனே அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்

69551பார்த்தது
பொங்கல் தொகுப்பு உடனே அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், உயரம் தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்காமல் முழுக் கரும்பு என்ற அடிப்படையில், தமிழ்நாட்டு விவசாயிகளிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். ஒரு கரும்புக்கு ரூ.50 வீதம் விலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, ரூ.1,000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும் .இதை உடனே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.