அரசு பேருந்தில் வாக்குவாதம் செய்த காவலர் மருத்துவமனையில் அனுமதி

84பார்த்தது
அரசு பேருந்தில் வாக்குவாதம் செய்த காவலர் மருத்துவமனையில் அனுமதி
தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி நடத்துனருடன் வாக்குவாதம் செய்ததது பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னையில் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அதன்போது ஆறுமுகப்பாண்டி மயக்கமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி