பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலீஸ்

74பார்த்தது
பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலீஸ்
தி.மலை மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (51) இவர், திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இதே அலுவலகத்தில் பணி புரியும் பெண் எஸ்.ஐ-யை சந்திக்க பெண் ஒருவர் அடிக்கடி வந்துள்ளார். இவருக்கும் நாராயணசாமிக்கும் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணையும் காவல்துறையில் சேருங்கள் எனக்கூறி பயிற்சியில் சேர்த்துவிட்டுள்ளார். இந்நிலையில் இருவரும் உணவகத்திற்கு உணவருந்த சென்ற நிலையில் நாராயணசாமி அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் நாராயண சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி