கள்ளச்சாராய விவகாரம்: நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!

53பார்த்தது
கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் ஆறுதல் கூறினார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று (ஜூன்21) விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதுவரை 49 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி