உ.பி.யில் பயங்கர சாலை விபத்து நடந்தது. திங்கள்கிழமை அதிகாலை ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள மதுரா-பரேலி நெடுஞ்சாலையில் தவறான பாதையில் சென்ற கார் மற்றும் பிக்கப் ட்ரக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.