கோயில் விழாவில் பக்தர்களுக்கு பரோட்டா பிரசாதம்

73பார்த்தது
கோயில் விழாவில் பக்தர்களுக்கு பரோட்டா பிரசாதம்
தென்காசி ஆலங்குளத்தில் உள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. திருவிழா நிறைவு நாளான நேற்று (செப்.17) இரவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக சுமார் 10,000 பரோட்டாக்கள் மற்றும் சென்னா மசாலா வழங்கப்பட்டன. இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கி சாப்பிட்டுச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி