நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் - விவசாயிகள் வேதனை

76பார்த்தது
நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் - விவசாயிகள் வேதனை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோட்டைமலை ஆறு, தலையணை ஆறு, மஞ்சள் கேணி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பனையூர் பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் இன்று (மே 19) தண்ணீரில் மூழ்கி நாசமாகின. மேலும், பயிர்கள் முளைத்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி