தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து மருத்துவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விழுப்புரத்திலிருந்து மருத்துவர் உள்ளிட்ட 51 பேர் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போத, ஒகேனக்கல் அருகே சென்ற சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. படுகாயமடைந்தவர்கள் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் பேருந்தை மீட்கும் பணி நடந்து வருகிறது.