உதகமண்டலம் - Ooty

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு செப்டம்பர் 27ஆம் தேதி ஒத்திவைப்பு

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாளையார் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் வழக்கினை விசாரணை செய்த குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் வழக்கினை எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கோடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் விடுப்பில் உள்ளதால் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வீடியோஸ்


நீலகிரி