உதகமண்டலம் - Ooty

"கேப்டன் மாதிரி விஜய் அண்ணா மாநாடு வெற்றி பெறும்"

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம், காந்தல் பகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடிகளை ஏற்றி ஏழை, எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிக கட்சி பிரதிநிதி பிரபாகரன் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் கேப்டனின் தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் உதகையில் பல்வேறு பகுதிகளில் தேமுதிக கொடி ஏற்றும் நிகழ்ச்சியில், நான் கலந்து கொண்டேன். 2005ஆம் ஆண்டு மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு 35 லட்சம் மக்கள் வருகை புரிந்து அனைத்து மக்களும் பத்திரமாக வீடுகளுக்கு சென்றது போல் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு முடிந்தவுடனே மாநில மாநாடு வெற்றி அடைந்ததா என கூற முடியும். கேப்டன் மாதிரி விஜய் அண்ணா மாநாடும் வெற்றி பெறும். எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவர்களது தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

வீடியோஸ்


நீலகிரி