உதகமண்டலம் - Ooty

நீலகிரி பந்தலூரில் கொட்டித் தீர்த்த கனமழை

நீலகிரி பந்தலூரில் கொட்டித் தீர்த்த கனமழை

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை இன்றும், நாளையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நீலகிரி தேவாலா, வுட் பிரையர் எஸ்டேட் பகுதியில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


நீலகிரி