கூடலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா

64பார்த்தது
தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு, தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா கூடலூர் முதல் மைல் பகுதியில் தனியார் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள், மற்றும் தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு கேடயம், பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை எண் 243ஐ தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும்.
ஆசிரியர் கலந்தாய்வு பொது மாறுதலை வரும் மே மாதத்திற்குள் முடித்திட வேண்டும்.
கூடலூர் ஒன்றியத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் இந்த கல்வியாண்டின் தொடக்கத்திலே வழங்கப்பட வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி மாணவர் நலனை பாதுகாக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி