கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

74பார்த்தது
கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்
கூடலூர் வேலி ரோட்டரி சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் கூடலூர் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார். ரோட்டரி சங்கத்தலைவர் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் ராபர்ட் முன்னிலை வகித்தார். பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கார்குடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியிலும் மாணவர்களுக்கு கண் பரி சோதனை மேற்கொள்ளப் பட்டது.

தொடர்புடைய செய்தி