நாமகிரிப்பேட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

61பார்த்தது
நாமகிரிப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 5) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் ஆ. சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீா்ப்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துப்பள்ளம், காக்கவேரி, அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம், மெட்டாலை, கோரையாறு, தொ. ஜேடா்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி