பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

52பார்த்தது
பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
மதுரை வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி (17) என்ற மாணவி இன்று (அக்., 10) காலை பள்ளிக்கு வந்த நிலையில், வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். மாணவியை உடனே அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் கொண்டு சென்ற நிலையில், மாணவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி