மனோரமாவை சிறுவயதில் வாட்டிய வறுமை.!

75பார்த்தது
மனோரமாவை சிறுவயதில் வாட்டிய வறுமை.!
மனோரமாவின் தந்தையார் அவரது தாயாரின் தங்கையை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனால் மனோரமாவின் தாயார் ராமாமிர்தம், மனோரமாவை அழைத்துக் கொண்டு காரைக்குடிக்கு அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்திற்கு குடி பெயர்ந்தார். ஆறாம் வகுப்பு வரை படித்த மனோரமா, குடும்ப வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை கைவிட்டார். பின்னர் தனது தாயாருடன் இணைந்து முறுக்கு மற்றும் பலகாரங்கள் சுட்டு மேடை நாடகங்கள் நடக்கும் இடங்களில் விற்று வாழ்க்கையை நடத்தி வந்தார்.

தொடர்புடைய செய்தி