பரமத்தி வேலூரில் பூக்கள் விலை உயர்வு

62பார்த்தது
பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்கள் விலை உயா்வடைந்துள்ளது.

பரமத்தி வேலூா் வட்டாரம் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள், வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ. 280, சம்பங்கி கிலோ ரூ. 30, அரளி கிலோ ரூ. 70, ரோஜா கிலோ ரூ. 150, முல்லைப் பூ ரூ. 200, செவ்வந்திப்பூ ரூ. 250, கனகாம்பரம் ரூ. 300, பன்னீா் ரோஜா ரூ. 60- க்கும் ஏலம் போனது.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 320, சம்பங்கி கிலோ ரூ. 50, அரளி கிலோ ரூ. 100, ரோஜா கிலோ ரூ. 220, முல்லைப் பூ கிலோ ரூ. 240, செவ்வந்திப்பூ ரூ. 300, கனகாம்பரம் ரூ. 500-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 80-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தொடர்புடைய செய்தி