பொதுமக்கள் தனியார் பேருந்துகளை சிறை பிடித்ததால் பரபரப்பு

62பார்த்தது
தனியார் பேருந்துகள் எஸ்பிபி காலனி பேருந்து நிறுத்த பகுதியில் நின்று செல்வதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், அவ்வப்போது இதுகுறித்து உள்ளூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்து துறைக்கும், பள்ளிபாளையம் போலீசாருக்கும் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஈரோட்டில் இருந்து தனியார் பேருந்து ஒன்று திருச்செங்கோடு நோக்கி செல்வதற்காக வந்த பொழுது எஸ்பிபி காலனி பேருந்து நிறுத்த பகுதி அருகே, சட்டக் கல்லூரி மாணவி இருவர் தனியார் பேருந்தை நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவிகளின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் பொதுமக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இதனை அடுத்து அங்கு விரைந்த பள்ளிபாளையம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பேருந்துகளை முறையாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என பள்ளிபாளையம் போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் அறிவுரை கூறினர். பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டதால் பேருந்தில் பயணித்த பயணிகளும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி