வேதாரண்யம் - Vedharanyam

நாகப்பட்டினம்:  விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நாகப்பட்டினம்: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் 15.04.2025 வரை இலவசமாக பதிவு செய்து அடையாள எண் பெற்று பயன்பெற மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஆகாஷ், தகவல். நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் 20ஆவது தவணைத்தொகை தொடர்ந்து பெற விவசாயிகளின் நில உடமை பதிவு மேற்கொண்ட அடையாள எண் அவசியம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.  நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு தளத்தில் விவசாயிகளின் நில விவரங்களை பதிவு செய்ய தங்கள் நில ஆவணங்கள் (கணினி சிட்டா, பட்டா), ஆதார் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசியுடன் சென்று 15.04.2025-க்குள் இலவசமாக பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பதிவு மேற்கொண்டு விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு இனி வரும் காலங்களில் பிரதம மந்திரி கிசான் நிதித் திட்டத்தில் 20ஆவது தவணைத்தொகை வரவு வைக்கப்படமாட்டாது. எனவே விவசாயிகள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் தங்கள் நில விவரங்களை பதிவு செய்து அடையாள எண் பெற்று பயன்பெற மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ப. ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்