காவலரின் தாய் கொலை.. இளம்பெண் கைது

61பார்த்தது
காவலரின் தாய் கொலை.. இளம்பெண் கைது
தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே தேரிப்பனையைச் சேர்ந்த காவலர் விக்ராந்த் என்பவரின் தாய் வசந்தா(70 வயது) நேற்று மர்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்தார். வீட்டிலிருந்த 8 சவரன் நகைகள் மாயமாகியிருந்ததால், வசந்தாவை கொன்றுவிட்டு மர்ம நபர்கள் கொள்ளை அடித்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வரதி (22) என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து நகைகளை மீட்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி