புதிய வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர்

73பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமை தாங்கினார். இதன் சிறப்பு அழைப்பாளராக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி