வைத்தியம் பார்த்த மருத்துவரை கொன்ற சிறுவர்கள்

81பார்த்தது
வைத்தியம் பார்த்த மருத்துவரை கொன்ற சிறுவர்கள்
டெல்லி, ஜெயந்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு புதன்கிழமை (அக்,02) இரவு 1.45க்கு இரண்டு சிறுவர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒரு சிறுவனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவனுக்கு மருத்துவர் ஜாவேத், சிகிச்சை பார்த்துவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார். பின்னர் கட்டுபோட்டுக்கொண்டு மருத்துவருக்கு நன்றி சொல்ல சென்ற இருவரும் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி