வயலில் கிடக்கும் மின் கம்பி: விவசாய பணிகள் பாதிப்பு

75பார்த்தது
சீா்காழி அருகே திருநகரி பகுதியில் பல மாதங்களாக வயலில் கிடக்கும் மின் கம்பியால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

சீா்காழி அருகே திருநகரி மேற்கு பகுதியில் ஆனந்த் என்பவரது வயலில் கடந்த நான்கு மாதங்களாக அப்பகுதி வழியாக செல்லும் மின்சார கம்பி தாழ்ந்து வயலில் கிடக்கிறது. இதில் மின் விநியோகம் இல்லை என்றாலும், நான்கு மாதங்களுக்கு மேலாக வயலில் கிடப்பதால் அப்பகுதியில் விவசாயப் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும், கால்நடைகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மின்வாரியத்துக்கு தகவல் அளித்தும் வயலில் கிடக்கும் மின்கம்பியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவா்கள் தெரிவித்தனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி