ஆலங்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

53பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தூய்மையே சேவை 2024இன் கீழ் சுகாதார மற்றும் கழிவுநீர் மேலாண்மை பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பேரணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

தொடர்புடைய செய்தி