குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்

57பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த கூறைநாடு பகுதிகளான பூக்கடை தெரு, வியாபாரிகள் தெரு, சார தட்டை தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாக்கடையில் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அதனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் உடனடியாக உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி