மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ராஜிவ்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை முன்பு ஒரு பக்கமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக தரங்கம்பாடி காவால மேட்டு தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் சகாயராஜ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். என் மனைவி அடிப்படையில் உடனடி நடவடிக்கையாக நேற்று கலெக்டர் இந்த இடத்தினை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா அவர்கள் உடன் இருந்தார்.