நாகப்பட்டினம் - Nagapattinam

நாகப்பட்டினம்
May 04, 2024, 16:05 IST/நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்

மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

May 04, 2024, 16:05 IST
நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2024-ஆம் ஆண்டிற்;கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15. 08. 2024 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. விருதுக்கான குறிக்கோள்:. இளைய சமுதாயத்தினரின் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்குதல். ஆ. இளைஞர்களை (15 முதல் 35 வயது வரை) சமூகத் தொண்டுகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல். இ. தலைச்சிறந்த பணிகளை ஆற்றிய இளைஞர்களுக்கு அங்கீகாரம் அளித்து அவர்களை எதிர்கால தலைமைக்கு உருவாக்குதல் போன்றவையாகும். விண்ணப்பிக்க தகுதியான நிபந்தனைகள்: விருதிற்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் பெண்கள் 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்டு இருத்தல் வேண்டும். நிதியாண்டின் துவக்க நாளான ஏப்ரல் 1, 2023 (01. 04. 2023) அன்று 15 வயது நிரம்பியவராகவும், நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31, 2024 (31. 03. 2024) அன்று 35 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் சமூக நலனுக்காக தொண்டு புரிந்தவராக இருத்தல் வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்