

நாகை: பாதாள சாக்கடையை சீரமைக்க கோரிக்கை
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட காடம்பாடி பதினைந்தாவது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இதன் அருகாமையில் மாவட்ட ஆட்சியர் முகாம் மற்றும் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள பாதாள சாக்கடை அவ்வப்போது நிரம்பி வருவதால் பலரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.