ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

80பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் ஐயர் கோட்டப்பாடியில் அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஸ்ரீ பூர்ண புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ அய்யனார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜையில் பூர்ணா ஹூதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் கோவிலை வலம் வந்து விமான கலசத்தை வந்தடைந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you