விஷம் கலந்த மதுவை குடித்த இளைஞர் உயிரிழப்பு

55பார்த்தது
மயிலாடுதுறை அருகே பிள்ளாவிடந்தையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்கொலை செய்து கொள்வதற்காக மதுவில் விஷம் கலந்து கணவன் ஜோதி பாசு (32) குடித்துவிட்டு மேலும் வைத்துள்ளார். இந்நிலையில் அவருடைய நண்பர் ஜெரால்டு (24) என்பவர் எதிர்பாராத விதமாக மதுவை வாங்கி குடித்ததால் நேற்று உயிரிழந்தார். இதில் ஜோதிபாசு மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி