பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த இளைஞரால் பரபரப்பு.

58பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திட்டை ஊராட்சியில் உமா சங்கர் தனது தம்பி நிதீஷ் குமார் உடன் வசித்து வருகிறார். இரண்டு சகோதரிகள் திருமணமாகி கனவருடன் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது பெற்றோர் ஜெகநாதன் - தையல்நாயகி இறந்த நிலையில் இவர்களுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் வசிக்கும் இடத்திற்கு பட்டா இல்லாததால் வீடு கட்ட  முடியவில்லை. தான் வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஊராட்சி மற்றும் வருவாய் துறை நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த உமா சங்கர் திடீரென்று பெட்ரோல் எடுத்து தன் தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். உடனடியாக ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி தலையில் தண்ணீர் ஊற்றி விசாரணை செய்து வருகின்றனர். கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் தனக்கு வீடுகட்டிதர நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இச்சம்பவம் பரபரப்பை எற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி