கீழ்வேளூர் - Kilvelur

நாகை: வெட்டப்பட்ட தலையுடன் காவல் நிலையத்திற்கு சென்ற பெண்

நாகை: வெட்டப்பட்ட தலையுடன் காவல் நிலையத்திற்கு சென்ற பெண்

நாகப்பட்டினம் அருகே வடக்கு பொய்கைநல்லூரை சேர்ந்தவர் பூங்கொடி (வயது 31) இவர் வளர்த்த ஆடு ஒன்றைக் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தனது ஆடு திருடப்பட்டதை அறிந்த அவர் அதனை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று எண்ணினார்.  கத்திரிக்காய் முற்றினால், சந்தைக்கு வந்து விடுவான் என்பதை அறிந்த அவர், தனது ஆடு எப்படியாவது கசாப்பு கடையில் தான் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டார். தொடர்ந்து கல்லார் பகுதியில் உள்ள ஒரு கசாப்பு கடைக்கு சென்று பார்த்தபோது அங்கு தனது ஆடு வெட்டப்பட்டு தலை தனியாக, முண்டம் தனியாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  தொடர்ந்து கசாப்பு கடைக்காரரான செய்யது அகமதுவிடம் இதுகுறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தனது ஆட்டின் தலையையும், உடலையும் பூங்கொடி கேட்டுள்ளார். அதனை தர மறுத்த செய்யது அகமது, பூங்கொடியை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த ஆட்டின் தலையை எடுத்துக்கொண்டு பூங்கொடி அங்கிருந்து நாகை டவுன் காவல்நிலையத்துக்கு வந்தார். கையில் ஆட்டின் தலையுடன் பெண் வருவதை பார்த்த போலீசார் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கசாப்பு கடைக்காரரான செய்யது அகமதுவை கைது செய்தனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்